ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - மட்டக்களப்பில் பரிதாபம்

Published By: Digital Desk 4

18 Jun, 2021 | 04:39 PM
image

மட்டக்களப்பு கோரவெளி கிராமசேவகர் பிரிவின் ஆயிலடிச்சேனை கிராமத்தை சேர்ந்த நாகராசா கரிசனன் வயது (14) என்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நேற்று மாலை 2.30 மணியளவில் நண்பருடன் தோணியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தோணியானது காற்றின் வேகம் காரணமாக ஆற்றின் நடுப்பகுதியினை சென்றடைய முற்பட்டுள்ளது .

இதனால் கரையில் நின்ற நண்பனின் உதவியினை நாடி காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார். 

கரையில் நின்ற நண்பனோ தோணியின் கயிற்றினை பிடித்து இழத்து கட்ட முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என சம்பவத்துடன் தொடர்புடைய அவரது நண்பர்  தெரிவித்தார்.

இறுதியில் அயலவர்களின் உதவியினை நாடியுள்ளனர். அதற்குள் பயத்தின் காரணமாக தோணியில் இருந்த குறித்த சிறுவன் ஆற்றில் பாய்துள்ளார். பாய்ந்தவரை காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இறுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குறித்த சிறுவனின் சடலத்தினை மீட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை  பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைத்தார் வெட்டச் சென்றவர் காட்டு யானை...

2025-03-17 11:13:37
news-image

வெற்றிலைக்கேணி மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக...

2025-03-17 11:03:21
news-image

ஆறு மாத கர்ப்பிணிப் பெண் தீயில்...

2025-03-17 10:45:54
news-image

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள்...

2025-03-17 10:41:53
news-image

ஹுனுப்பிட்டியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-17 10:25:01
news-image

மொரட்டுவையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-03-17 10:00:01
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று...

2025-03-17 10:27:48
news-image

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு...

2025-03-17 09:54:53
news-image

கரையோர ரயில் சேவைகள் தாமதம் 

2025-03-17 09:18:26
news-image

மிதிகமவில் துப்பாக்கிச் சூடு 

2025-03-17 09:00:43
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு...

2025-03-17 09:10:34
news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21