கொரோனாவால் உயிரிழப்பவர்களை எரியூட்ட கட்டணம் தேவையில்லை : வவுனியா நகரசபை தவிசாளர்

Published By: Digital Desk 2

18 Jun, 2021 | 03:21 PM
image

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக் கோட்டினை சேர்ந்த நபர்களை எரியூட்டுவதற்கு இனிமேல் கட்டணம் அறவிடப்படாது என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பூந்தோட்டம் மயானத்தில் எரியூட்டப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த எரியூட்டல் செயற்பாட்டிற்கு இதுவரை கட்டணம் அறவிடப்பட்டு வந்தது. இதனால் வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனையடுத்து இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் சடலங்களை கட்டணம் அறவிடாமல் எரியூட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அந்தவகையில் அவர்களது வறுமை நிலையினை உறுதிப்படுத்தும் விதமாக கிராமசேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர்களின் உறுதிப்படுத்தல் சான்றிதழ்கள் எமக்கு சமர்பிக்கப்படும் பட்சத்தில் அந்த சடலங்களை கட்டணம் இல்லாமல் எரியூட்டுவதற்கான அனுமதியினை மாத்திரம் நாம் வழங்குவோம். 

ஏனைய விடயங்களை (பிரேதப்பெட்டி) உரிய தரப்பினரே தயார்படுத்தி வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதியமைச்சின் சொகுசு வாகனங்களை ஏலத்துக்கு விட...

2025-05-16 21:24:08
news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21