(எம்.மனோசித்ரா)
பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பின்னணியில் பசிலே காணப்படுகிறார். அவரின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்றும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அமையக் கூடும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஜே.வி.பி. கட்சி மட்டத்தில் கலந்தாலோசித்து உரிய தீர்மானத்தை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
எரிபொருள் விலை அதிகரிப்புடன் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்புக்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே உதய கம்மன்பில, சாகர காரியவசம் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. பசில் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலை அதிகரித்திருக்காது என்று கூறுகின்றனர். அவ்வாறெனில் அவர் ஜனாதிபதியையும் பிரதமரையும் விட அதிகாரம் மிக்கவரா?
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் , சாகர காரியவசம் உதய கம்மன்பிலவிற்கு எதிராக வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணியில் பசில் ராஜபக்ஷவே இருக்கிறார். எனவே தற்போது ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவரது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலகுவானதாக அமையலாம்.
எனவே வாழக்கை செலவு குறித்த அமைச்சரவை உப குழுவில் இந்த தீர்மானத்தை எடுத்த சகலருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதி இதுவரையில் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. கிடைத்ததன் பின்னர் அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து ஜே.வி.பி. தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM