(எம்.மனோசித்ரா)
கொழும்பில் தினமும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில், பி.1.617.2 என்ற நிலைமாறியே வைரஸ் பரவலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருக்கும் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர அதில் , கொழும்பில் பரவுவது பி.1.617.2 வைரஸாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம்.
இந்த வைரஸானது பி.117 வைரஸை விட 50 வீதம் வேகமாக பரவக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது மிகவும் கடுமையானது என்பதோடு முதலாம் கட்டமாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று ஆரம்பமான நாள் முதல் மேல் மாகாணமே இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் நேற்று காலை வரை 1,22,259 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 58,151 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM