மத்திய வங்கி அதிகாரிகளுக்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை

Published By: Digital Desk 4

16 Jun, 2021 | 08:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியில் பெரும்  நெருக்கடிக்குள்ளாகியுள்ள  மக்களிடமிருந்து  தவணை கடன்களை மீள பெறும் போது அவர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு  தேவையான சிறந்த திட்டங்களை செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இதன் போதே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் தேசிய பொருளாதாரத்தை  சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லும் செயற்திட்டங்களை மத்திய வங்கியின் அதிகாரிகள் தெளிவுபடுத்திய பிரதமர் , வணிக கடன்களை பெற்றுக் கொண்ட மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம்  செலுத்தினார்.

 வாடிக்கையாளர்களிடமிருந்து தவணை கடன்களை மீள பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு தேவையான சிறந்த திட்டங்களை செயற்படுத்துவது அவசியம் என பிரதமர் மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து  மக்கள் கடன்களை  பெற்றுக் கொள்ள தங்களின் வீட்டின் உறுதிப்பத்திரத்தை பிணை வைக்கிறார்கள்.

சில வேளைகளில்  அவர்களுககு அவர்களின் வீடு இல்லாமல் போகும் சூழல் ஏற்படலாம். இவ்வாறான செயற்பாடுகள்  அவர்களை உளவியல் ரீதியில் பாதிக்க கூடும். ஆகவே இதற்கு  மாற்றீடான வழிமுறைகளை  கைளாளுமாறு பிரதமர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21