இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவராக ஜூலி சங்கை நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளதாக வெள்ளை மாளிகை செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அmமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட ஜூலி ஜியுன் சங், மாலைதீவு குடியரசின் தூதராகவும் ஒரே நேரத்தில் பணியாற்றுவார்.
ஜூலி சங் மூத்த வெளிநாட்டு சேவையின் தொழில் உறுப்பினராகவும், அமைச்சர்-ஆலோசகரின் வகுப்பாளராகவும், தற்போது செயல் உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
அவர் முன்பு வெளியுறவு திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராக இருந்தார்.
கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும், தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு ஜூலி சங் தலைமை பணியாளராக இருந்தார்.
அவர் கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.
தென் கொரியாவின் சியோலில் பிறந்த ஜூலி சங், பி.ஏ. கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகார பாடசாலையில் எம்.ஏ. செயலாளரின் சிறப்பு மரியாதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதுவராக தற்சமயம் பணியாற்றி tரும் அலைனா பி. டெப்லிட்ஸ் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM