(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது மிகச்சிறியளவில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், மரணங்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனினும் தற்போது நாளாந்தம் பதிவாகும் மரணங்களை அறிவிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதால் நாட்டின் நிலைமை குறித்து ஓரளவு சரியான மதிப்பீட்டை செய்ய முடியும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக கொவிட் மரணங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தில் பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகளும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் இதனை உறுதிப்படுத்தினார்.
இவர்களில் 22 வயதுடைய மகள் கடந்த 4 ஆம் திகதி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்த மகளின் 71 வயதுடைய தந்தை இன்று செவ்வாய்கிழமை காலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் பசறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை 57 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதே வேளை நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணி வரை 1843 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 227 765 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 190 464 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 35 098 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM