பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை படகில் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, கரையை நோக்கி சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பது கண்டறியப்பட்டது. கேரள கஞ்சா கொண்ட இரண்டு சாக்குகள் படகில் காணப்பட்டன.
அதனால் அதில் பயணித்த மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட கேரள கஞ்சாவின் மேலும் ஆறு சாக்குகள் இருப்பது தெரியவந்தது.
08 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 237 கிலோ 500 கிராம் ஈரமான கேரள கஞ்சா கடற்படை கைப்பற்றியது.
சர்வதேச கடல் எல்லையில் உள்ள கேரள கஞ்சாவை டிங்கிக்கு கொண்டு வர கடத்தல்காரர்கள் முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கேரள கஞ்சாவின் பெறுமதி 7 கோடியே 10 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் இருவர் 27 வயதுடையவர்கள். அவர்கள் இருவரும் பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்தவர்கள். மற்றையவர் அச்சுவேலி வளலாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர்.
சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM