காணாமல்போன மீனவர் 2 நாட்களின் பின் 30 கிலோ மீற்றர் நீந்தி கரை சேர்ந்தார்

Published By: Gayathri

14 Jun, 2021 | 12:18 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

இரண்டு நாட்களாக காணமால்போயிருந்த மீனவரொருவர் நடுக்கடலிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரம் வரையில் நீந்தி மன்னார் கடற்கரைக்கு வந்து தப்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

புத்தளம், கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த டிலான் கொஸ்தா எனப்படும் இந்த மீனவர், மேலும் 10 மீனவர்களுடன் மீன்பிடிக்காக படகு மூலம் கடந்த 10 ஆம் திகதியன்று கடலுக்குச் சென்றுள்ளனர். 

படகில், இயந்திர கோளாறு ஏற்படவே அவர்கள் கடலில் விழுந்துள்ளனர். எனினும், அவர்களில் இரண்டு பேர் மாத்திரம் படகில் ஏறி எப்படியாவது தத்தளித்து மீண்டும் கரைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் 2 நாட்களாக காணமால் போயிருந்த  மன்னார் கடற்கரைக்கு நீந்தி வந்த டிலான் கொஸ்தா எனும் மீனவரின் உடல்நிலை சரியில்லாததால் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்த மூவருடன் சென்ற ஏனைய மீனவர்கள் குறித்து இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47