கோழி , முட்டைகளைக் கொண்டு செல்வதைப் போன்று கஞ்சா கடத்தியவர் கைது

Published By: Digital Desk 3

14 Jun, 2021 | 12:03 PM
image

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று கஞ்சா கொண்டு சென்றமை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்கமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமாக பயணித்த லொறியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கோழி மற்றும் முட்டைகளை கொண்டு செல்லும் பாங்கில் இவ்வாறு கஞ்சா தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்காக மன்னார் மாவட்ட அதிபரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு குறித்த லொறியில் இவ்வாறு கஞ்சா தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று கஞ்சா கொண்டு சென்றமை தொடர்பில் 56 வயதுடைய குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வேயங்கொட பிரதேசத்தில் 5 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , இவரிடமிருந்து 18,480 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கல்கிஸை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றா விசாரணைப்பிரிவினரால் கிராண்பாஸ் - பாபாபுள்ளே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 90,100 ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பொலிஸாரால் 3 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38