கோழி , முட்டைகளைக் கொண்டு செல்வதைப் போன்று கஞ்சா கடத்தியவர் கைது

Published By: Digital Desk 3

14 Jun, 2021 | 12:03 PM
image

(எம்.மனோசித்ரா)

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையிலுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று கஞ்சா கொண்டு சென்றமை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்கமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகத்திற்கிடமாக பயணித்த லொறியொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கோழி மற்றும் முட்டைகளை கொண்டு செல்லும் பாங்கில் இவ்வாறு கஞ்சா தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோழி மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்காக மன்னார் மாவட்ட அதிபரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு குறித்த லொறியில் இவ்வாறு கஞ்சா தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று கஞ்சா கொண்டு சென்றமை தொடர்பில் 56 வயதுடைய குறித்த லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வேயங்கொட பிரதேசத்தில் 5 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு , இவரிடமிருந்து 18,480 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீகொட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் கல்கிஸை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றா விசாரணைப்பிரிவினரால் கிராண்பாஸ் - பாபாபுள்ளே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 90,100 ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பொலிஸாரால் 3 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46