ரிஷாத், ரியாஜின் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒரு வாரத்திற்குள் மன்றில் சமர்பிப்பு

Published By: Digital Desk 8

12 Jun, 2021 | 02:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர்  ரியாஜ் பதியுதீன் ஆகியோர்  தம்மை பயங்கரவாத  தடை சட்டத்தின் கீழ்  கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து  தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக்கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ள வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள், சி.ஐ.டி.யில் இருப்பின் அவற்றை ஒரு வாரத்தில் உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன்  அறிவித்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர்   தனித் தனியாக  தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில்  நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது.

 நேற்றைய தினம் இம்மனுக்களில் முதலில் ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலிக்கப்பட்டது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா  ஆகியோர் ஆஜராகினர்.

ரியாஜ் பதியுதீன்  சார்பில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்  சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.

இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோனும் சிரேஷ்ட  அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.

 இதன்போது மனுதாரர்கள் சார்பில் வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,  வழக்கு விசாரணையுடன்  தொடர்புடைய பல ஆவணங்கள், சி.ஐ.டி.யின் பொறுப்பில் உள்ள நிலையில் அவற்றை நீதிமன்றில் பாரப்படுத்த உத்தரவொன்றினை விடுக்குமாறு கோரினார்.

 எனினும் இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ,  சி.ஐ.டி.யில் அவ்வாறான ஆவணங்கள் இருப்பின் அவற்றை ஒரு வாரத்துக்குள் மன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

 இவ்வாறான நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம்,  குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி  எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க  உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33
news-image

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு 

2026-04-22 17:25:26
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ்...

2026-04-22 17:26:38
news-image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19...

2026-04-22 17:09:55
news-image

நாட்டின் நிதி பாதுகாப்பு ஆபத்தில்: வெளிநாட்டிற்கு...

2026-04-22 16:38:47