செ.தேன்மொழி
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
பேலியகொடை பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் , 55 000 ரூபாய் பணம் மற்றும் போதைப் பொருட்களின் நிறையை அளவிடுவதற்காக பயன்படுத்தும் மின் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை , 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குருணாகல் பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரின் சோதனை நடவடிக்கையின் போது 102 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞனை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM