2 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள் : 30 பேர் வீடுகளிலேயே உயிரிழப்பு : இன்று 2,759 தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Digital Desk 4

11 Jun, 2021 | 09:56 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ள நிலையில் , ஒரே நாளில் நூற்றுக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் நூறுக்கும் அதிக கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

101 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2011 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 53 ஆண்களும் 48 பெண்களும் உள்ளடங்குவதோடு , 30 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற்ற மரணங்கள் கொவிட் தொற்றினால் ஏற்பட்டவை என்று நேற்றைய தினமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஏனைய மரணங்கள் மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் 9 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.

வாழைச்சேனை, வேபொட, பசறை, வெலம்பொட, புபுரெஸ்ஸ, நாவலபிட்டி, தொலொஸ்பாகே, நுவரெலியா, ஹட்டன், றாகமை, பொலன்னறுவை, பண்டாரகம, நேகொட, மில்லனிய, உணவிட்டுன, அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினூங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிஸை, ஹோமாகம, பிலியந்தல, தெஹிவளை, மஹரகம, கொழும்பு-15, கெஸ்பேவ, கந்தபொல, நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகல, நாத்தாண்டியா, அக்கரைப்பற்று, மொரட்டுவை, மடவல, ஹப்புகஸ்தென்ன, நாகொட, மத்துகம, பேருவளை, கிதலவ, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, மட்டக்களப்பு, உடபுஸலாவை, ரத்தொழுகம, சீதுவை, அரநாயக்க, புளத்சிங்கள, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, போம்புவ, கண்டி, வேயங்கொடை, வெலிகம, ரத்கம, மாரவில, படல்கம, அம்கஸ்துவ, ஏகொடஉயண, அங்குலானை, தும்மலசூரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று 2,759 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 218 893 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 184 090 பேர் குணமடைந்துள்ளதோடு , 32 818 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36