அரசாங்கத்தை விமர்சித்ததன் பலனையே, எதிர்க்கட்சியினர் அனுபவித்து வருகின்றனர்..!

Published By: J.G.Stephan

10 Jun, 2021 | 05:52 PM
image

(நா.தனுஜா)
எதிர்க்கட்சித்தலைவர் பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் அரசாங்கம் அமைப்பதற்கான பலத்தை வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 எதிர்க்கட்சிக்குள் எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் பாரிய குழப்பமொன்று ஏற்பட்டிருப்பதுடன் அக்கட்சி முழுமையாகப் பிளவடைந்துள்ளது. கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் அரசாங்கத்தை விமர்சித்ததன் பலனையே அவர்கள் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,  தற்போது சம்பிரதாய எதிர்க்கட்சியாக செயற்பட்டுவரும் சஜித் பிரேமதாஸ தலைமையில் இயங்கும் அனைத்துத்தரப்பினரும் அரசாங்கம் தொடர்பில் மிகவும் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிறந்த விடயங்களுக்கும் எவ்வித நன்மையையும் தராத விடயங்களுக்கும் பொதுவாக எதிர்ப்பை வெளியிட்டுவரும் தரப்பினரையே 'சம்பிரதாய எதிர்க்கட்சியினர்' என்று விளிக்கின்றோம்.

 அவர்கள் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், அனைத்து சவால்களுக்கும் முகங்கொடுத்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றகரமான பாதையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார். அவ்வனைத்து முயற்சிகளின்போதும் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்கள் என்றார். 

மேலும், எதிர்க்கட்சிக்குள் எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் குழப்பமொன்று காணப்படுவது தெளிவாகியுள்ளது. இந்த அணி பல பாகங்களாகப் பிளவடைந்துள்ளது என்பதும் வெளிப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கிலேயே சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் செயற்பட்டனர். அதற்கான பலனையே இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31