இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தினால் இலங்கைக்கு 65 இலட்சம் ரூபாய் பெறுமதியான பி.சி.ஆர். இயந்திரம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிரு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜய பெட்டினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர். இயந்திரம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் முயற்சியின் ஊடாக இந்த பி.சி.ஆர். இயந்திரம் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, தியத்தலாவை வைத்தியசாலைக்கு இந்த இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்காக தனியார்துறை வழங்கும் பங்களிப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதம அலுவலகத்தின் பிரதானி யோஷித்த ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM