தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை..!

Published By: Digital Desk 8

09 Jun, 2021 | 06:05 PM
image

(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பாதிப்படைந்துள்ளன. இணையவழியூடாக  மூலமாக  கற்றல் நடவடிக்கையின் செயற்திறன் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை  முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்திலிருந்து இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று தொலைநோக்குக் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்ற நேற்று இடம்பெற்ற விவாதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று பூகோள மட்டத்தில்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவல் ஒரு சில நாடுகளில் தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையையும் நாம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும், தமிழ்  சிங்களப் புதுவருடத்தின் பின்னர் ஏற்பட்ட 'புதுவருடக் கொத்தணி' பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடிக்கும் அதேவேளை, கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவலின்  தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி கொவிட் - 19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் இந்தத் தடுப்பூசிகளை நன்கொடை அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் பெற்றுவந்திருக்கின்றோம்.

கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி பொதுமக்களின்  சுகாதாரப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாகப் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கு உரிய நிவாரணங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒன்லைன் மூலமாக கற்றல் நடவடிக்கையின் செயற்திறன் தொடர்பில் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இயலுமை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் முதலாவது வாரத்தில் இந்த செயற்திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பாதிப்படைந்துள்ளன. இதன் அடுத்தடுத்த பரவல் அலை எப்போது தோற்றம்பெறும் என்று முன்கூட்டியே எதிர்வு கூறமுடியாததன் காரணமாக, தொலைநோக்குப் பார்வையுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மறுசீரமைப்பது இன்றியமையாததாகும். எனவே இது குறித்து அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஊடகங்கள் வாயிலாக கற்றல்சார் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு தொடக்கம் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கென பிரத்தியேக கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47