மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் விமான நிலையங்களில் இருந்து விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வதாக அச்சுறுத்திய 34 வயதுடைய நபரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் அழைப்பாளர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக போபாலின் காந்திநகர் காவல் நிலைய பொறுப்பாளர் அருண் சர்மா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் விமான நிலைய நிர்வாகம் காந்திநகர் பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடு அளித்தது.
அதையடுத்து விமானங்களை கடத்திச் செல்வதாக அச்சுறுத்தியதாகக் கூறப்படும் அந்த நபர், போபாலில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள சுஜல்பூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.
இந் நிலையில் கைதான நபரிடம் இது தொடர்பான பூரண விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அருண் சர்மா பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் உறுதிபடுத்தியுள்ளார்.
இதேவேளை அச்சுறுத்தல் அழைப்பைத் தொடர்ந்து போபால் விமான நிலையத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளதாக மேலும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM