'கொழும்பு மஹத்தயா' எனும் பெயரால் அறியப்படும் பாதாள உலகக் குழுத் தலைவனின் அடியாட்கள் 5 பேர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது களுத்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப் பொருள், கைக்குண்டு மற்றும் சில ஆயுதங்களுடன் இவர்கள் இவ்வாறு காலி வீதியூடாக களுத்துறை திசையில் இருந்து கொழும்பு நோக்கி காலி வீதியூடாக பயணித்துக்கொன்டிருந்த போதே நேற்று முன் தினம் இரவு வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் காரை சோதனைக்கு நிறுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மோதிவிட்டு தப்பிச் செல்லவும் முயற்சித்துள்ளதுடன் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்த சில்வாவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே வாடியமங்கட சந்தியில் வீதித் தடையை ஏற்படுத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைக்குண்டொன்றும், ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 15 உம், மெகஸின் இரண்டும், வாள்கள் இரண்டும் ஹெரோயின் போதைப் பொருள் 5.21 கிராமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள் பயணித்த காரை சோதனை செய்ய பொலிஸார் நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையம் முன்பாக வைத்தே இந்த சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த சமிக்ஞையை கணக்கில் எடுக்காத சந்தேக நபர்கள் தாம் பயணித்த காரை கொழும்பு நோக்கி வேகமாக செலுத்தியுள்ளனர்.
இந் நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அந்த காரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பொலிஸ் கான்ஸ்டபிளை காரால் மோதி வீழ்த்திவிட்டு தப்பிச் செல்லவும் சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.
எனினும் மேலும் மூன்று கான்ஸ்டபிள்கள் இணைந்து வாடியமங்கட சந்தியில் வீதித்தடையொன்றை திடீரென ஏற்படுத்தி வேகமாக வந்த காரின் வேகத்தை குறைத்துள்ளனர். இதன்போது காரை பின் தொடர்ந்து வந்த கான்ஸ்டபிள் காரின் திறப்பை திடீரென கழற்றி எடுத்துள்ளார். இதனையடுத்து உடன் செயற்பட்ட ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் சந்தேக நபர்களை கைது செய்து காரை சோதனை செய்தபோதே ஆயுதங்களும் ஹெரோயினும் சிக்கியுள்ளன.
கைதான சந்தேக நபர்கள் பாணதுறை, மொறட்டுவை மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் குற்றச் செயல் ஒன்றில் ஈடுபடவே இவ்வாறு குழுவாக சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் பொலிஸார் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்மல் கொடித்துவக்குவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM