நாட்டில் இரத்தம் தட்டுப்பாடு : நிவர்த்தி செய்ய இரத்தம் வழங்குவோம் !

Published By: Digital Desk 4

06 Jun, 2021 | 09:53 PM
image

நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக இரத்த தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய இரத்த மத்திய நிலையம் கடந்த மாத இறுதி பகுதியில் இரத்தத்தைப் பெறுவதற்கு எமது உதவியைக் கோரியது.

அதன்படி, எமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் நிறுவியுள்ள மின்னியலாளர்கள் அமைப்புகளின் உதவியுடன், தற்போதைய இரத்த பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த இரத்ததான முகாம்களை விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இலங்கை பொது பயன்பாடுகளை ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகளை ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையினூடாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது;

10 நாட்களுக்குள், முதல் ஐந்து முகாம்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வங்கிகளின் தேவைகளைப் பொறுத்து அந்த முகாம்களுக்கு கிட்டத்தட்ட 500 பைன்ட் இரத்தத்தை தானம் செய்ய முடிந்தது. மேலும், 2,500 பைன்ட் இரத்தத்தை வெகுவிரைவில் இரத்த வங்கிக்கு தானம் செய்வதே எங்கள் குறிக்கோள். 

இந்த மாதத்தில் இரத்தினபுரி, கண்டி, பொலன்னறுவ, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேலும் 7 சிறப்பு இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளோம். தேவைக்கேற்ப இரத்த விநியோக முகாம்களை அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழுவின் இந்த இரத்ததான முகாம்களில் மக்கள் இரத்த தானம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மற்றும் பங்களிப்பு செய்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய இரத்த  மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு, மாவட்ட மின்னியலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து, இரத்த தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண மாவட்ட அளவில் 12 இரத்த தான முகாம்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில் ஐந்து முகாம்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன, மீதமுள்ள முகாம்களை இந்த மாதம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசரமாக இரத்தம் தேவைப்படும் குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில், முதல் ஐந்து இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 800 க்கும் மேற்பட்ட இரத்த தானம் செய்தவர்கள் (கொடையாளர்கள்) பதிவு செய்யப்பட்டனர்.

இந்த ஐந்து முகாம்களிலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இரத்த நிலையங்களுக்குத் தேவையான கிட்டத்தட்ட 500 பைன்ட் ரத்தத்தை தானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மின்னியலாளர்கள்  அமைப்புகள் மற்றும் பிற பொது அமைப்புகளுடன் இணைந்து, இரத்த தானம் செய்பவர்களை பதிவு செய்து, பயணிக்க நேரத்தையும் அனுமதியையும் அளிக்கிறது. இவை இணையம் மூலம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39
news-image

2024 ஆம் ஆண்டு முதல்  தனி...

2023-11-29 20:46:22
news-image

யாழ்.நகர அபிவிருத்தி தந்திரோபாய திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட...

2023-11-29 19:22:09
news-image

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீரர்களின் ஆதரவு...

2023-11-29 21:00:05
news-image

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக...

2023-11-29 20:57:16
news-image

சவூதி நிதியம் மாத்திரமே தொடர்ந்து உதவி...

2023-11-29 20:34:24
news-image

கொழும்பில் 50 ஆயிரம் பேருக்கு குடியிருப்பு...

2023-11-29 16:45:36
news-image

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மேலும் விரிவடைந்து...

2023-11-29 17:31:21
news-image

பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் : இல்லாவிடில்...

2023-11-29 16:54:56