டுவிட்டர் தடையை மீறினால் வழக்குத் தொடரப்படும் - நைஜீரிய அரசு எச்சரிக்கை

Published By: Vishnu

06 Jun, 2021 | 10:34 AM
image

நாட்டின் டுவிட்டர் தடையை மீற முயற்சிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குத் தொடரப்படும் என்று நைஜீரிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக அந் நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

நைஜீரியாவில் தொலைதொடர்பு இயக்குனர்கள், டுவிட்டருக்கான அணுகலை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்குவதாகக் கூறினர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு மோதலை மேற்கோள் காட்டி ஜனாதிபதி மொஹமட் புஹாரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். 

வன்முறையை தூண்டுவதாக கூறி இந்த பதிவை டுவிட்டர் நீக்கியது. 

ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு காலவரம்பற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மக்கள் டுவிட்டரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46