2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சம்பியனான ரஃபேல் நடால் உள்ளூர் வீரரான ரிச்சர்ட் கேஸ்கெட்டை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நடால் தனது 35 ஆவது பிறந்த நாளான நேற்றைய தினம் 6-0 7-5 6-2 என்ற நேர் செட்களில் கேஸ்கெட்டை தோற்கடித்து இவ்வாறு தொடரின் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ரோலண்ட் கரோஸில் 13 முறை வென்ற நடால், கேஸ்கெட்டுக்கு எதிராக தனது ஆட்டமிழக்காத சாதனையை 17-0 என உயர்த்தினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடந்து வருகிறது.
இதில் 5 வது நாளான நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6 ஆவது இடம் வகிக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-0, 6-4 என்ற நேர் செட்டில் அன் லியை (அமெரிக்கா) தோற்கடித்து 3 ஆவது சுற்றை எட்டினார்.
5 ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சோபியா கெனின் தன்னை எதிர்த்த சக நாட்டவரான பாப்டிஸ்டை 7-5, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.
அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 1-6 என்ற நேர் செட்டில் ஸ்லோன் ஸ்டீபன்சிடம் (அமெரிக்கா) வீழ்ந்தார்.
உலகின் நம்பர் ஒன் நட்சத்திரமும், 2019 ஆம் ஆண்டு சாம்பியனுமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 2 ஆவது சுற்றில் 45 ஆம் நிலை வீராங்கனை மேக்டா லினெட்டியை (போலந்து) சந்தித்தார்.
முதலாவது சுற்றின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஆஷ்லி பார்ட்டி 2 ஆவது சுற்றிலும் அதே காயத்தால் தடுமாறினார்.
ஆட்டத்தின் இடையே சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் பலன் இல்லை. 1-6, 2-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போது வலி அதிகமானதால் இனி தன்னால் தொடர்ந்து விளையாட இயலாது என்று கூறி ஆஷ்லி ஒதுங்கினார். இதனால் லினெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது டாப்-3 வீராங்கனைகள் யாரும் களத்தில் இல்லை. ஏற்கனவே 2 ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் நவோமி ஒசாகா, ஊடக சந்திப்பு புறக்கணிப்பு சர்ச்சையால் முதல் சுற்றுடன் போட்டியில் இருந்து விலகினார்.
இதே போல் பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள சிமோனா ஹாலெப் (ருமேனியா) போட்டி தொடங்கும் முன்பே பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சக்காரி (கிரீஸ்), முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் 2 ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாசை (உருகுவே) வீழ்த்தி 3 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 2-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை (குரோஷியா) வெளியேற்றி 3 ஆவது சுற்றை எட்டினார்.
பெரேட்டினி (இத்தாலி), மெட்விடேவ் (ரஷியா), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), கோல்ஸ்கிரீபெர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.
இரட்டையர் பிரிவின் 2 ஆவது சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)- பிராங்கோ ஸ்குகோர் (குரோஷியா) கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டியாபோ- மோன்ரோ இணையை சாய்த்து 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM