சுகாதாரத்துறைப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது: பாலித ரங்கே பண்டார

Published By: Digital Desk 8

03 Jun, 2021 | 06:47 PM
image

(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் சுகாதாரத்துறைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது. 

அதற்கான எதிர்வினைகளை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் தயாராகும் வேளையில், அவர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே சுகாதாரசேவையுடன் தொடர்புடையதும் அதனை வலுப்படுத்துவதற்கு அவசியமானதுமான சேவைகளை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறது என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் மேலும் கூறியிருப்பதாவது:

இந்த நாட்டிற்குக் கிடைத்த அதிஷ்டமற்ற அரசராக கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிட முடியும். அவருடைய ஆட்சிக்காலத்தில் நாட்டில் நியாயமற்றதன்மை மேலோங்கியுள்ளது. ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் மனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் முழுவதுமாக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் சூழலும் வெகுவாக மாசடைந்துள்ளது. அன்றாடம் தொழில் செய்து கூலி பெறுபவர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இவற்றுக்கு மத்தியில் அடிக்கடி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுகின்ற விளையாட்டை ஆட்சியாளர் ஆரம்பித்திருக்கின்றார். அதன்படி சுகாதாரசேவையுடன் தொடர்புடையதும் அதனை வலுப்படுத்துவதற்கு அவசியமானதுமான சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டது. மருத்துவ அதிகாரியிலிருந்து கீழ்மட்ட சுகாதாரசேவைப்பணியாளர் வரை அனைவரும் தற்போதைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு அவசியமான போதியளவான சுகாதாரப்பாதுகாப்பு அங்கிகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவில்லை. சுகாதாரப்பணியாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. விசேட கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை. இது குறித்து சுகாதாரசேவைப்பணியாளர்கள் கடந்த காலத்திலிருந்தே தொடர்ச்சியாகக் கூறிவருகின்றனர். எனினும் அவர்களுக்கான தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. அதன்படி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அவர்கள் தயாராகும் வேளையில், அந்த சேவைகளை அத்தியாவசியமாக்குகின்ற வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

சுகாதாரசேவைப் பணியாளர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அரச ஊழியர்களை அச்சுறுத்தும் விதமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை அரசாங்கத்தை முறையாக நடத்தமுடியாவிட்டால், பதவி விலகிவிட்டு அரசாங்கத்தை நடத்தும் இயலுமை உள்ளவர்களிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05