சி.வி.யும், மாகாண சபையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு

Published By: MD.Lucias

26 Aug, 2016 | 07:31 PM
image

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையும் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு இடையூறாக செயற்படுகின்றது. அரசாங்கதின் ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின்  இலங்கை  வருகை என்ன அடிப்படியில் அமைந்துள்ளது. இவர் வருவதன் பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் எனவும் அவர்  குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின்  இலங்கைக்கான  விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை  வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

வடமாகாண சபையும் வடக்கு முதலமைச்சரும் நல்லாட்சி அரசாங்கதின் பயணத்தை தவறாக விளங்கிக்கொண்டோ அல்லது இந்த ஆட்சியில் தமக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கிக்கொள்ள செயற்பட்டு வருகின்றனர். இன்று வடக்கின் சூழல் முன்னைய காலங்களை விட வேறுபட்ட ஒன்றாகவும், ஜனநாயகம் பலமடையும் வகையிலும் அமைந்துள்ள நிலையில் அந்த சூழலை சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று அரசாங்கம் வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது.

வடக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டுள்ளது, இதுவரை காலமும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் , சர்வதேச முதலீடுகள் வடக்கை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயங்களில் முன்னைய நிலைமைகளை போல அரசாங்கம் தடுக்கவோ அல்லது மட்டுப்படுதவோ இல்லை. எனினும் அமைந்துள்ள  இந்த சூழலை வடக்கு முதல்வரும் வடமாகாண சபையும் தவறான வகையில் பயன்படுத்த முயட்சிக்கின்றது. அரசங்கம் வடக்கு மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள முயட்சித்தாளும் வடக்கு முதல்வரும், வடமாகாண சபையும் அதற்கு இடையூறாக உள்ளனர். இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08