கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கத் தீர்மானம்

Published By: Digital Desk 3

03 Jun, 2021 | 11:22 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது.

எனவே அதிக பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க கூடிய கர்ப்பிணிகளை தெரிவு செய்து அவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்பட்டால் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டும்.

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் இரு கட்டமாகவும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டாலும் தொற்றுக்கு உள்ளானால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வது கடினமாகும்.

தற்போது கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிகளுக்காக சகல மாவட்டங்களிலும் வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதன்போது பிறக்கும் குழந்தைக்கும் சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிக சிக்கல்களைக் கொண்டுள்ள கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார தரப்பினரால் தனிப்பட்ட பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.

எனவே அந்த அறிவித்தலுக்கு ஏற்ப வைத்தியசாலைகளுக்கு அல்லது தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்கு வருகை தருமாறு கர்பிணிகளை அறிவுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா : மனித...

2023-09-30 09:09:05
news-image

களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப்பொருள்

2023-09-30 08:50:46
news-image

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா...

2023-09-30 08:54:35
news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20