அரசாங்கத்துக்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது.
அத்துடன் அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டு குற்றம் சுமத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கைத் தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுனில் ஹத்துன்நெத்தி எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் கீழான நிறுவனங்கள் நட்டத்தை எதிர்கொள்கின்ற மற்றும் மூடிவிட வேண்டிய நிறுவனங்களுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையானது இன்று மரணித்துவிட்ட தொழிற்சாலையாக உள்ளது. ஆனால் அதற்கான தலைமைக் காரியாலயம் கொள்ளுப்பிட்டியில் இருக்கிறது.
அதேபோன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையானது பெருமளவிலான தொழில் வழங்கும் தொழிற்சாலையாக இருந்து வந்த போதிலும் அது தற்போது பாகிஸ்தானின் தொழிற்சாலையாகவே இயங்கிவருகிறது.
அதுமாத்திரமின்றி அங்குள்ள இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகள் விற்கப்பட்ட பணத்திலிருந்து தான் அதன் தலைமைக்காரியாலயம் 25 மாடி கொள்ளுப்பிட்டியில் அமைக்கப்படுகிறது. சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை விற்பனை செய்து 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுகிறது.
மருதமுனை சாரம் என்பது இலங்கையர்களால் விரும்பப்படுகின்ற ஒரு உற்பத்தியாகும்.எனினும் அதனை அபிவிருத்தி செய்வதற்கு எந்தத் திட்டமும் இல்லை. இலங்கை முழுதும் இயங்கி வருகின்ற வைத்தியசாலைகளுக்கு படுக்கை விரிப்பு, தலையணை உறை போன்றவற்றை உற்பத்தி செய்தலே ????? ஆடை உற்பத்தி துறையை விருத்தி செய்ய முடியும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வரிகளை செலுத்தி வருகின்ற தனியார் துறை பாரிய அபிவிருத்திகளையும் இலாபத்தினையும் அடைந்து வருகின்ற நிலையில் அரசாங்கத்திடம் இருந்து நிவாரணங்களைப் பெற்றுக் கொள்கின்ற அரச நிறுவனங்கள் நட்டத்தையே காட்டுகின்றன.
குறிப்பிட்டுக் கூறுவதாயின் போட்டித்தன்மையே இல்லாத இலங்கை விமான சேவை மற்றும் மிஹீன் லங்கா விமான சேவை ஆகிய இரண்டு சேவைகளுமே அரசுக்கு சொந்தமானவை இங்கு இந்நிறுவனங்களுக்கு எதிர் நிறுவனங்கள் இல்லை. ஆனாலும் நட்டத்தில் இயங்குகின்றன.
மேலும் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM