கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளில் மே மாதம் 200 கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 4

01 Jun, 2021 | 09:18 PM
image

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வருகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் மே மாதம் மாத்திரம் 200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் அண்ணளவாக 4000  தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் கடந்த மாதம் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 1144 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்  200 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய ஆடைத் தொழிற்சாலையில் 555 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 4000 பேர் பணியாற்றுகின்ற இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும்  1699 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 200 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் சாந்தபுரம் கிராமத்தில்  அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் குறித்த கிராம் கடந்த 29 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற இளையவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அது வீடுகளில் உள்ள முதியோர்களுக்கும் ஏற்படும். முதியோர்களுக்கு அதிகளவில் தொற்று ஏற்பட்டால் அது சுகாதார துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள். 1500 பேர் பணியாற்றுகின்ற கொக்கலை சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில்  283 பேருக்கு தொற்று ஏற்பட்டு நோய் பரவும் விதமாக செயற்பட்டார் எனத் தெரிவித்து அங்குள்ள பொது சுகாதார பரிசோதககர்களால் குறித்த ஆடைத் தொழிற்சாலையின் முகாமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவர் நேற்றுவரை ( 31)  விளக்கமறியலவில் வைக்கப்பட்ட சம்வத்தை சுட்டிகாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியின் சிவில் சமூக பிரதிநிதிகள்  எனவே கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை விடயத்தில் மாவட்ட சுகாதார துறை அதிகளவு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கோகரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55
news-image

அரச பாடசாலை கட்டிடங்களுடன் இணைந்ததாக முன்பள்ளிகளை...

2026-07-19 16:51:27
news-image

செம்மணி புதைகுழிக்குள் உட்கார்ந்த நிலையில் என்பு...

2026-07-19 16:47:25
news-image

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப்...

2026-07-19 16:36:04
news-image

79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன...

2026-07-19 16:11:11
news-image

நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழப்பு

2026-07-19 15:20:17
news-image

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்...

2026-07-19 17:51:53
news-image

அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை...

2026-07-19 15:02:16