கொரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்படுவது எப்படி?

Published By: Digital Desk 4

31 May, 2021 | 08:57 PM
image

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.

கொரோனாத் தொற்றின் 3 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருவருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல அறிகுறிகள் உண்டாகின்றன.

மூக்கு அல்லது வாய் வழியாக எம்முடைய உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் கிருமிகளை எம்முடைய உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதனை எதிர்த்து போராடி அழிக்கிறது. 

மிதமான அல்லது தொடக்கநிலை கொரோனாத் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியான வெள்ளை அணுக்கள் அதனை எதிர்த்துப் போராடி, கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கும்.

ஆனால் சிலருக்கு கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து அழிக்க, வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது, அதிலிருந்து சைட்டோகைன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். இவை வைரசை அழிப்பதற்காக பணியாற்றுகிறது. இந்த திரவம் வைரஸ் கிருமிகளை மட்டும் அழிக்காமல் எம்முடைய நுரையீரலிலிருந்து இரத்தத்திற்கு பிராணவாயு செல்லுமிடத்தையும் தாக்கி சேதப்படுத்துகிறது. 

இது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு ஆறாவது நாளிலிருந்து தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் நமது உடலில் உட்புகுந்து இருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகள் இந்த சேதத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் அந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியிலுள்ள வெள்ளை அணுக்கள் இயல்பான அளவைவிட அதிக அளவில் செயல்பட்டு, சைட்டோகைன்ஸ் என்ற திரவத்தை சுரப்பதனால், நுரையீரலில் ஓக்சிஜன் மற்றும் குருதி பரிமாற்றம் நடைபெறும் பகுதி சேதமடைகிறது. 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொடர்புடைய நோயாளிக்கு ஓக்சிஜன் அளவு குறையத் தொடங்குகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை அதிகரிக்க ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த ஸ்டீராய்டு மருந்துகள் வெள்ளை அணுக்கள், அதிகமாக சுரக்கும் சைட்டோகைன்ஸ் என்ற திரவத்தை கட்டுப்படுத்துகிறது.

இதன் காரணமாக கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் பரிசோதனை செய்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டால் இத்தகைய நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம். அத்துடன் இத்தகைய பாதிப்பு வராமல் தற்காத்துக் கொள்ள அரசு அறிவித்திருக்கும் மருத்துவ நடைமுறைகளையும் நாம் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

டொக்டர் துரை

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10
news-image

குளுக்கோமா நோய் : 2020 ஆம்...

2025-03-06 04:09:10
news-image

சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும்...

2025-03-03 14:44:16
news-image

இதய பாதிப்பினை கண்டறிவதற்காக சி டி...

2025-03-01 16:56:34
news-image

புராஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-26 17:21:25
news-image

புலன் இயக்க பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும்...

2025-02-25 18:33:10