புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் பேரழிவு தரும் குறுக்கீடுகளை கொவிட் தொற்று ஏற்படுத்தியுள்ளதாக மும்பையின் புற்றுநோய் நோயாளிகள் உதவி சங்கத்தின் தலைவர் சுபா மொஹட்கல் தெரிவித்தார்.
வாழ்க்கையின் வர்ணங்கள் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனையில் கிடைக்கப்பெறும் நிதியை புற்றுநோயில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக வழங்குவது இந்த அமைப்பின் பிரதான பணியாகும்.
ஆனால் கொவிட் தொற்று காரணமாக இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அகில இந்தியா ரீதியில் சுமார் 24 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.
தற்போதைய நிலைமை நம்மில் பெரும்பாலோரை வீட்டிலேயே முடக்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுபா மொஹட்கல் குறிப்பிட்டார்.
வருடதோரும் கலர்ஸ் ஆஃப் லைஃப் கண்காட்சி 2005 முதல் மும்பையில் உள்ள சிம்ரோசா கலையரங்கில் நடைபெறும். கடந்த ஆண்டு, 136 கலைஞர்கள் மெய்நிகர் நிகழ்வில் கிட்டத்தட்ட 300 கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM