அடுத்த ஆண்டு முதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம், ஆலோசனைகள் வெளியீடு

Published By: Digital Desk 8

30 May, 2021 | 02:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)
2022 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்காக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான  விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கோவை  கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தையும் ஆலோசனை கோவையினையும்  கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பார்வையிட முடியும்.

இதன் பிரகாரம் பிள்ளைகளை  முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை  பெற்றோர் அல்லது  பிள்ளைகளின் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாவலர்கள் பாடசாலை அதிபருக்கு எதிர்வரும் மாதம் 30ஆம் திகதிக்குள் கையளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அஞ்சல் ஊடாக பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைத்தல் அவசியாகும். விண்ணப்பங்களை நிரப்புவதற்கு முன்னர்  ஆலோசனை அறிவுறுத்தல்களை  முழுமையாக வாசித்தல் கட்டாயமாகும். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும் போது  பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும்  பிள்ளை 5 வயதை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், அதனை  உறுதிப்படுத்துவதற்கு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப்பிரதியை   சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

2022 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி 6 வயதோ  அல்லது  அதற்கு அதிகமான வயதெல்லையை கொண்ட மாணவர்களை முதலாம் தரத்திற்கு  இணைத்துக் கொள்வதானது 6 வயதிற்கு குறைவான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே முன்னெடுக்கப்படும்.

 முதலாம் தரத்திற்கு நேர்முக பரீட்சை ஊடாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 5 பிள்ளைகளையும் இணைத்துக்கொள்ள முடியும். வகுப்பறை ஒன்றிற்கு 40 மாணவர்களை மாத்திரம் உள்வாங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் உணர்வெழுச்சியுடன் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கொள்கைப்...

2025-05-18 13:14:07
news-image

கொழும்பிலுள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற...

2025-05-18 13:08:24
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் நடைபெற்ற...

2025-05-18 13:03:36
news-image

தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி...

2025-05-18 13:00:53
news-image

கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:23:32
news-image

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற...

2025-05-18 12:53:48
news-image

யாழில் 119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

2025-05-18 12:09:35
news-image

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:21:04
news-image

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்

2025-05-18 11:25:26
news-image

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம்...

2025-05-18 11:53:48
news-image

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண்...

2025-05-18 11:07:32
news-image

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில்...

2025-05-18 12:32:45