மீனவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை

Published By: Digital Desk 2

29 May, 2021 | 05:07 PM
image

இராஜதுரை ஹஷான்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவலினால் சமுத்திரத்திற்கும், கரையோர பிரதேசங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சீர் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள  பாதுகாப்பு நடவடிக்கைகள்  குறித்து  கண்காணிக்க இன்று  சனிக்கிழமை உஸ்வெடகெய்யாவ கடற்கரை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சமுத்திரத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமான முறையில் முன்னெடுக்குமாறு பிரதமர்  சமுத்திர சூழல்  பாதுகாப்பு  அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக அன்றாட வருமானம் பெறும் வகையில் மீன்பிடி  தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி  தொழிலுடன் ஒன்றினைந்த  தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்ளுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வல்வெட்டித்துறையில் டெங்கு பரக்கூடிய சூழலை...

2025-04-26 11:56:16
news-image

கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் விபத்து...

2025-04-26 11:45:37
news-image

யாழ்.பருத்தித்துறையில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு...

2025-04-26 12:02:41
news-image

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...

2025-04-26 12:33:10
news-image

லுனுகம்வெஹெர பகுதியில் கஞ்சா செடிகளுடன் இருவர்...

2025-04-26 10:34:34
news-image

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின்...

2025-04-26 10:26:27
news-image

தந்தை செல்வாவின் 48ஆவது நினைவு தினம்!

2025-04-26 11:22:06
news-image

அம்பேவல பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்...

2025-04-26 11:55:15
news-image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல்...

2025-04-26 11:29:32
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக்கொலை...

2025-04-26 10:11:10
news-image

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல்...

2025-04-26 09:49:35
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்...

2025-04-26 09:34:16