பொலிசாரை தாக்கிய கடத்தல்காரர்கள் இருவர் கைது

Published By: J.G.Stephan

29 May, 2021 | 02:16 PM
image

(செ.தேன்மொழி)
அநுராதபுரம் -பரசன்கஸ்வௌ பகுதியில் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை  கடத்தும் நபர்களை கைது செய்வதற்காக சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோத்தர்கள் இருவர், பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஆகியோரை தாக்கியமை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதாகியுள்ளனர். 

குறித்த நபர்கள் இருவரும் , எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பரசன்கஸ்வௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலேவ பகுதியில் அதிகாலைவேளையில்,  சட்டவிரோதமான முறையில் கால்நடைகள் கடத்தப்படுவதாக , அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொலிஸாருக்கு தகவல் வழங்கி நபரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் , அங்கிருந்த கடத்தல்காரர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் , தகவல் வழங்கிய நபரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் , தகவல் வழங்கிய நபரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31