தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான கைதி சரணடைந்தார் 

Published By: Digital Desk 4

28 May, 2021 | 08:00 PM
image

(செ.தேன்மொழி)

கொவிட்-19 வைரஸ் பரவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற கைதி சரணடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு சரணடைவதாக தெரிவித்ததன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளும் , பொலிஸாரும் இணைந்து அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

தப்பிச் சென்ற 3 ஆவது கொரோனா தொற்றாளரான கைதியும் பிடிபட்டார் - மேலும்  இருவருக்கு வலைவீச்சு | Virakesari.lk

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து , பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது , சிறைச்சாலை பேரூந்திலிருந்து தப்பிச் சென்ற கைதி சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு சரணடைவதாக தெரிவித்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியில் இருந்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அழைத்து வந்ததுடன் . அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி இரவு 7 மணியளவிலேயே கைதி தப்பிச் சென்றிருந்தார்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பிச் சென்றிருந்ததுடன் , அவர் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலே கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை , குறித்த கைதி போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21
news-image

 ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்...

2025-02-13 21:32:28