அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

27 May, 2021 | 07:50 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் காணப்படும் கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டே அமெரிக்காவினால் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் , ' இலங்கையில் நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக இலங்கைக்கான பயண ஆலோசனையை நிலை 3 ( பயணத்தை மீள் பரிசீலனை செய்யுங்கள்) மற்றும் நிலை 4 (பயணம் செய்ய வேண்டாம்) என்பவை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்குவதாகவும் , பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் விடுவிக்கப்பட்டிருந்த எந்த மாற்றமும் இல்லை ' என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பதிவிற்கு விளக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக  வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம்  இலங்கைக்கு 4 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்றபோதிலும் இவ் எச்சரிக்கையில் பயங்கரவாதம் அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில்  இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை  வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம்  பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு  தெரிவித்துக் கொள்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10