போக்குவரத்து கட்டுப்பாட்டு நடைமுறைப்படுத்தலின் போது, மக்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை..!

Published By: J.G.Stephan

26 May, 2021 | 12:44 PM
image

(எம்.மனோசித்ரா)
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டமை வரவேற்கத்தக்கது. எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்  பின்னர் மக்கள்  தமக்கு தேவையான பொருட்களை  சிக்கலின்றி கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் எரிவாறு சிலிண்டரை கொள்வனவு செய்பவர்கள் எவ்வாறு அதை கொண்டு செல்வார்கள் ? பெண்களால் இதனை கொண்டு செல்ல முடியுமா ? இவ்வாறான விடயங்களை கவனத்தில் கொள்ளாது அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் பொறுத்தமற்றவை.

கடந்த சில தினங்களாக கடும் மழையுடனான காலநிலை நிலவுகிறது. இவ்வாறு மழை பெய்யும் போது எவ்வாறு பொருட்களை கொண்டு செல்வது ? மக்களின் சிரமங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளமை பொறுத்தமற்றதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

கிழக்கு மாகாணசபையை கைப்பற்றுவது தான் இலக்கு...

2025-03-23 06:37:02
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

2025-03-23 06:37:30