காலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

25 Aug, 2016 | 01:29 PM
image

காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் சுவரில் நடந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ள குறித்த சிறுமி எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார். 

காலி – வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற சிறுமியே இவ்வாறு சுவரில் ஏறும் ஆற்றல் படைத்தவராவார்.

 

சிறுமிக்கு இரு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை அவரிடம் காணப்படுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right