கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியிலுள்ள கோமா நகர்ப்பகுதியில் எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகதாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைராகொங்கோ மலைப்பகுதியில் சனிக்கிழமை அன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 9 பேர் எரிமலை குழம்பு தங்கள் வீடுகளை தாக்கிய போது எரிந்து உயிரிழந்துள்ளார்கள். ஐந்து பேர் குளிந்த எரிமலை லாவா குழம்பின் குறுக்கே நடந்து செல்லும்போது புகை அல்லது நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர் என மாகாணத்தின் சிவில் பாதுகாப்புத் தலைவர் ஜோசப் மகுண்டி தெரிவித்துள்ளார்.
இதனைவிட, 14 பேர் லொறி விபத்தில் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் வடக்கு கிவுவின் தலைநகரான கோமாவில் உள்ள முன்சென்ஸ் மத்திய சிறைச்சாலையை உடைக்க முயன்ற கைதிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிவப்பு எச்சரிக்கை வலயத்தில் வசிப்பவர்கள் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பக்கூடாது எனவும் மாகாண அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM