அரசாங்கம் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பாக்கிர் மாக்கார்

Published By: Digital Desk 4

24 May, 2021 | 08:33 PM
image

(நா.தனுஜா)

அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை உபயோகித்து நாட்டுமக்களின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் வகையிலான வெறுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.

நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலேனும், அரசாங்கம் தமது அற்ப அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு எடுக்கும் பிரயத்தனங்களைக் கைவிட்டு கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்கள் சமூகத்தின் பொதுவான நலனை நோக்கி செல்லவேண்டும் - இம்தியாஸ் பாக்கிர்  மாக்கார் | Virakesari.lk

அவ்வறிக்கையொன்றை வெளியிட்டு இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

தற்போதைய அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை உபயோகித்து நாட்டுமக்களின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் வகையிலான வெறுக்கத்தக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.

இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் நாட்டுமக்களின் ஜனநாயக சுதந்திரத்தை மழுங்கடிக்கும் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.

அரசியலமைப்பிற்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை போன்றனவற்றின் மூலம் சட்டத்தின் ஆட்சியையும் நாட்டின் ஜனநாயகத்தின் இருப்பை மதிக்காத தன்மையின் போக்கையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புலப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர், அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்குரிய உரிமைக்கு தடைகளை ஏற்படுத்துவதிலிருந்து புலப்படுவது கொவிட் - 19 பேரழிவின் பெயரில் இந்நாட்டுப் பிரஜைகளின் சுதந்திர உரிமைகளை பறிக்கும் மிலேச்சத்தனமான முயற்சி இடம்பெறுகின்றது என்பதேயாகும்.

அரசாங்கம் கையாளும் நடைமுறைகள், ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய திறந்த கலந்துரையாடல் என்பவற்றிற்கு தடைகளை ஏற்படுத்த விளைவதன் மூலம் அரசாங்கம் தகவல்களை மறைப்பதற்கு முற்படுகின்றதல்லவா? மக்களுக்காக தாம் சரியான முடிவுகளை நடைமுறையில் பிறப்பிப்பதாக இருந்தால் திறந்த கருத்துத் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. அரசாங்கம் தற்பெருமை மனோபாவத்திலிருந்து மீண்டு, யதார்த்தபூர்வமாக இத்துறைசார் செயற்பாடுகளில் குறித்த வைத்திய பிரபலங்கள் மற்றும் விஷேட நிபுணர்களின் வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயற்பட முன்வரவேண்டும்.

கொவிட் - 19 பரவல் நெருக்கடியின் ஆரம்பத்திலிருந்தே அதுகுறித்து சற்றும் பொருட்படுத்தாது முன்னாயத்த நடைமுறைகளைக் கையாளாததன் விளைவுகளையே இன்று நாடு அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கொவிட் வைரஸ் பரவலின் ஆபத்து குறித்து முன்னரே அறிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதிகளில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதுகுறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தமையை ஞாபகப்படுத்துகின்றேன்.

முதலாவது எச்சரிக்கை விடுத்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் வைரஸ் பரவலோ அல்லது தொற்றாளர்களோ இனங்காணப்பட்டிருக்கவில்லை. இரண்டாவது எசந்தர்ப்த்தில் நாட்டில் ஒரு தொற்றாளர் மாத்திரம் இனங்காணப்பட்டிருந்தார். இச்சந்தர்ப்பங்களில் இந்நோயின் ஆபத்துகள் குறித்தும் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு சுட்டிக்காட்டியபோது ஆளுந்தரப்பினர் எதிர்க்கட்சித் தலைவரை கொச்சைப்படுத்தினர்.

தற்போது நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையின் பின்னரேனும், அரசாங்கம் தமது அற்ப அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு எடுக்கும் பிரயத்தனங்களைக் கைவிட்டு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து பரந்த தூரநோக்கில் ஆபத்தான பேரழிவிலிருந்து நாட்டை மீட்க கூட்டுப்பொறுப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும நலன்புரித் திட்டம் ; இரண்டாம்...

2023-12-10 23:06:19
news-image

மினுவாங்கொடை கல்விக்கோட்டத்திலுள்ள 35 பாடசாலைகள் நவீன...

2023-12-10 23:03:43
news-image

அரசாங்கத்தை பாதுகாக்க சபையில் கூட்ட நடப்பெண்...

2023-12-10 23:05:55
news-image

மட்டக்களப்பு மயிலத்தமடுவில் இடம்பெறும் அத்துமீறல்கள் இன...

2023-12-10 23:01:49
news-image

இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின்...

2023-12-10 22:58:39
news-image

யாழ். பொற்பதியில் கரையொதுங்கிய படகு!

2023-12-10 22:52:44
news-image

கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது...

2023-12-10 18:17:58
news-image

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி...

2023-12-10 18:32:30
news-image

கொழும்பு BMICHக்கு முன்னால் விளம்பர பலகை...

2023-12-10 17:58:40
news-image

விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டப்பட்ட முச்சக்கர...

2023-12-10 23:00:05
news-image

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட...

2023-12-10 23:19:02
news-image

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை...

2023-12-10 18:04:49