அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதி வரை நீடிப்பு..!

Published By: J.G.Stephan

24 May, 2021 | 04:19 PM
image

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை நாடு முழுவதும் தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாட்டை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (25.05.2021), 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாளை  25 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது பொதுப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

இதேவேளை, மே 25 ஆம் திகதி, மே 31 ஆம் திகதி, ஜூன் 4 ஆம் திகதி ஆகிய நாட்களில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியுமெனவும் நடை பயணத்தில் மாத்திரமே வெளியில் சென்று அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37