ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
15 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் நடக்க இருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி இந்த ஆண்டில் ஜூன் மாதம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய சூழலில் 2021 ஆம் ஆண்டுக்குரிய ஆசிய கிண்ண போட்டி 2023 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய அணிகளுக்கு இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் இந்த ஆண்டில் இந்தபோட்டியை நடத்த சாத்தியம் இல்லை.
அதன் பிறகு 2022 ஆம் ஆண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் இருப்பதால் 2021 ஆம் ஆண்டுக்குரிய ஆசிய போட்டியை 2023 ஆம் ஆண்டில் மட்டுமே நடத்த வாய்ப்பு இருப்பதாக ஆசிய கவுன்சில் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM