மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை (24) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவும் , ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களாகவும்,சிறைச்சாலை உத்தியோகத்தர்களாகவும் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 82 கொரோனா தொற்றாளர்களும், தற்போது வரை மொத்தமாக 442 நபர்களும், இந்த வருடம் மாத்திரம் 425 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் தற்போது வரை 2 ஆயிரத்து 72 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் தாரபுரம் துருக்கி சிட்டி பகுதியில் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்ட பெண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையத்தில் தற்போது வரை 80 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் மன்னார், வவுனியா மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதியில் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து கொண்டு வீடு செல்ல உள்ளனர்.
நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(25) பயணக்கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படாமல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் தேவை இன்றி வீடுகளில் இருந்து வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். அவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வரும் போது வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் வருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM