நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் அவரது மனைவி திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
குறித்த தகவலை, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவரும், அவரது பாரியாரும் விரைவில், நலம்பெற வேண்டுமென நாட்டுமக்கள் பிரார்த்தித்துவருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் தமது உத்தியோகப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிவில் கூறியிருந்ததாவது,
"கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் - என் மரியாதைக்குரிய எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது துணைவியார் என் அன்புக்குரிய திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோர் அந்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மீண்டு வர, எமது நாட்டு மக்கள் அனைவருடனும் இணைந்து எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன்."
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிவில் கூறியிருந்ததாவது,
"நோய் தொற்று பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ள எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரது துணைவியார் திருமதி ஜலானி பிரேமதாச ஆகியோர், தேக ஆரோக்கியம் பெறவேண்டுமென்றும், விரைவில் நலம்பெறவேண்டுமென்றும் தான் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.”
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM