புத்தளம் நகர சபைத் தலைவரின் மரணம்; மூவர் கைது

Published By: Vishnu

24 May, 2021 | 01:38 PM
image

(செ.தேன்மொழி)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புத்தளம் நகர சபைத் தலைவருமான அப்துல் பாயிஸின் மரணம் தொடர்பாக மூவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் அவரது வாகன சாரதி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

புத்தளம் நகரசபையின் தலைவர் கே.ஏ.பாயிஸ் நேற்று மாலை 5.30 - 6.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்ற விபத்தின் போது உயிரிழந்துள்ளார். 

நகர சபை தலைவர் , சிலருடன் ரால்மடுவ குளத்தில் நீராடி பின்னர் , தனது கெப் ரக வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்து பயணித்துள்ளார். இதன் போது வாகனத்திலிருந்து தூக்கி எரியப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் விபத்தின் போது மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ள நகரசபை தலைவர் பாயிஸின் மரண பரிசோதனைகள் நிறைவுபெற்ற பின்னரே மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படும். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் மற்றும் வாணாத்தவில்லு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59