போலிச் செய்திகள் பரவுகின்றன : அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

Published By: Digital Desk 4

23 May, 2021 | 08:23 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இணையங்கள் மூலம் போலிச் செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக சட்டமூலத்தை  தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் | Virakesari.lk

இது தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இவ்வாறு வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வருமாறு இராஜங்க அமைச்சர் விடுத்திருந்த கோரிக்கைக்கு ஏற்ப உதவ முன்வந்தவர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் இவ்வாறு கோரிக்கை விடுத்ததன் பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு அவரது பெயரை பயன்படுத்தி சிலர் போலியாக இவ்வாறான கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

'ஸ்ரீலங்கா யுனேடட் (Sri lanka Unites) என்ற டுவிட்டர் தளத்தில் சில மருத்துவ உபகரணங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவியளிக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது போலியான செய்தியாகும் என்று அமைச்சு அறிவிக்கிறது. எனவே இவ்வாறான செய்திகள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34