(செ.தேன்மொழி)
கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் - தொண்டமனாறு கடற்கரையோரத்தில் 39 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா தொகை மீட்க்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா தொகை இன்று ஞாயிறுக்கிழமை அழிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் - தொண்டமனாறு கடற் பகுதியில் நேற்று சனிக்கிழமை கடற்படையினரால் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடற்கரையோரத்தில் சந்தேகத்திற்கிடமான 4 பொதிகளிலிருந்து 131 கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையை கருத்திற் கொண்டு , சந்தேக நபர்கள் இந்த கேரள கஞ்சா தொகையை கைவிட்டு சென்றிருக்கலாம் என்று கடற்படையினர் சந்தேகிக்கிப்பதாகவும் கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM