நாளை மாத்திரம் மாவட்டங்களுக்கிடையில் ரயில் சேவை

Published By: Digital Desk 4

23 May, 2021 | 04:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நாளைமறுதினம் செவ்வாய்கிழமை தளர்த்தப்படவுள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை மாத்திரம் மாவட்டங்களுக்கு இடையில் மாத்திரம் அத்தியாவசிய சேவைக்காக ரயில்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நாளை மறுதினம் மாத்திரம் தளர்த்தப்படவுள்ளன. அத்தியாவசிய சேவையில் ஈடுப்படுபவர்களுக்காக மாத்திரம்  ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு 3 ரயில் பயணங்களும், கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அம்பேபுஸ்ஸவிற்கு 3   ரயில் பயணமும், பொல்காவெலயில் இருந்து கண்டிக்கும், கண்டியில் இருந்து பொல்காவெலவிற்கு ஒரு ரயில் பயணமும் அளுத்கமையில் இருந்து மருதானைக்கும், மருதானையில் இருந்து அளுத்கமைக்கு 2 ரயில் பயணமும் , கொச்சிகடையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையில் இருந்து கொச்சிக்கடைக்கு 2 ரயில் பயணமும் அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளைக்கு 1 ரயில் பயணமும், பெலியத்தயில் இருந்து ஹிங்குருவ்விற்கும், ஹிங்குருவ்வில் இருந்து பெலியத்தைக்கு ஒரு ரயில் பயணமும் நாளை மாத்திரம் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலும், நிறுவன பிரதானிகளின் உறுதிப்படுத்தல் பத்திரங்களையும் கொண்டு பயணிகள்  ரயில் போக்குவரத்து சேவையினை பயன்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21