கபில்
“வடக்கில் தொல்பொருள் சின்னங்கள் பௌத்த சின்னங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அவற்றை சிங்கள பௌத்த வரலாறாக திரிபுபடுத்தி, தமிழரின் அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் தான் ஆபத்தானவை”
போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற முக்கியமான மாற்றங்களில் ஒன்று, சிங்கள பௌத்த மயமாக்கலாகும்.
காலம் காலமாக தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள், இந்த சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு அங்கமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன.
தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் அமைந்துள்ள வடக்கு கிழக்கை சிங்கள, பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள், இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கல்லோயா குடியேற்றத் திட்டமும், மகாவலி அபிவிருத்தி திட்டமும் தமிழர் நிலங்களை சூறையாடுவதற்காகவே வகுக்கப்பட்ட திட்டங்கள்.
இதன் மூலம் தான், 1911ஆம் ஆண்டில், கிழக்கில் வெறும் 3 சதவீதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை, இப்போது, 37 வீதத்தை எட்டியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுதலும், பௌத்த அடையாளங்களை நிறுவி, தமிழரின் பாரம்பரிய தாயக கோட்பாட்டை இல்லாதொழிப்பதும் தான் பிரதான நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது.
போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தினால் நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்த செயற்பாடு மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கை புராதன பௌத்த தொல்பொருள் பிரதேசங்களாக அடையாளப்படுத்தி,சிங்கள பௌத்த ஆட்சிக்குட்பட்ட பிரதேசம் என நிறுவுவதில் குறியாக செயற்படுகிறது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-23#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM