தனிமைப்படுத்தலில் இருந்து 38 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு

20 May, 2021 | 07:24 AM
image

கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 38 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் 6 மாவட்டங்களிலுள்ள 38 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின்  8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும், வவுனியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்