தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது..!

Published By: J.G.Stephan

19 May, 2021 | 05:57 PM
image

(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக மாகாண  எல்லைப்பகுதிகளை  கடக்க  முற்பட்ட 113 வாகனங்களில் பயணித்த 215 பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன்போது அடையாள அட்டை இறுதி இலக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்றுகாலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 10,413 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மேல்மாகாணத்திற்குள் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் , நேற்று காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரையில் 64 அங்காடி விற்பனையாளர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் , அவர்கள் அனைவருமே முகக்கவசம் அணிந்தே விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது , பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை ஆறு மணிவரையிலும் ,அடையாள அட்டையின் இறுதி இலக்க விதிமுறை தொடர்பில் கண்காணிக்கப்பட்டதுடன் , 9,793 பேர் இதன்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உரிய விதிமுறைகளை மீறியதாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின்  எல்லை பகுதிகளில் இடம்பெற்றுவரும் சோதனை நடவடிக்கையின் போது 2,568 வாகனங்களில் பயணித்த 4,942 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர். இதன்போது மாகாண எல்லைகளை கடக்க முற்பட்ட 113 வாகனங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த 215 பேரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு...

2025-03-24 11:18:43
news-image

பதுளை - பண்டாரவளை வீதியில் விபத்து...

2025-03-24 10:40:07
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2025-03-24 10:16:56
news-image

வத்தளையில் ஆணின் சடலம் மீட்பு!

2025-03-24 10:25:37
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்!...

2025-03-24 10:05:01
news-image

யாழில் அதிகரிக்கும் இணைய நிதி மோசடி...

2025-03-24 09:50:15
news-image

தென்னஞ்செய்கையாளர்களுக்கு உர மானியங்கள் வழங்க நடவடிக்கை...

2025-03-24 09:26:27
news-image

“இன்ஸ்டாகிராம் களியாட்ட நிகழ்வு” : 57...

2025-03-24 09:14:28
news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11