லெபனாலிருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி ஆறு ரொக்கெட்டுகள் திங்கட்கிழமை பிற்பகுதியில் வீசப்பட்டதாகவும், எனினும் அவை வெற்றியளிக்கவில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.
லெபனானின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பீரங்கித் தாக்குதலுடன் பதிலளித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் நோக்கி இஸ்ரேல் 22 குண்டுகளை வீசியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் கூறியுள்ளது.
இருப்பினும் இதனால் உண்டான சேத விபரங்கள் கூறப்படவில்லை.
இது கடந்த வாரத்திலிருந்து எல்லை தாண்டி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது வன்முறைச் சம்பவம் ஆகும். கடந்த வியாழக்கிழமை, லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி மூன்று ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன.
ஆனால் அவை மத்திய தரைக்கடலில் தரையிறங்கியதுடன், எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தவில்லை.
லெபனானில் உள்ள சிறிய பாலஸ்தீனிய பிரிவுகள் கடந்த காலங்களில் இஸ்ரேல் மீது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM