கொரோனா தொற்று ஏற்பட்டால் தடுப்பூசி போட முடியுமா ? - விளக்குகிறார் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

Published By: Digital Desk 4

16 May, 2021 | 09:15 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்று அறிகுறிகள் ஏதேனும் காணப்படுபடுமாயின் அவ்வாறானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது பொறுத்தமற்றது.

எனவே அறிகுறிகள் காணப்படுபவர்கள் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னரே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பானர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

Articles Tagged Under: விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர | Virakesari.lk

கொழும்பில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் தொற்று ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கின்ற நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் தொற்று அறிகுறிகள் காணப்படுபவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது பொறுத்தமற்றது.

காரணம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் , அவர்களிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவும் அபாயம் ஏனைய தொற்றாளர்களைப் போலவே காணப்படும்.

எனவே ஏதேனும் அறிகுறிகள் காணப்படுபவர்கள் பரிசோதனைகள் ஊடாக தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு , அதன் பின்னர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நபரொருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் அவருக்கு தொற்று அறிகுறிகள் எவையும் இல்லையெனில் அல்லது சிறிதளவு அறிகுறிகள் காணப்படின் குறித்த நபருக்கு வைரஸால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களும் , அவரிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவும் வேகமும் 10 - 14 நாட்களில் குறைவடையும்.

எனவே வைத்தியசாலைகளிலும் இடைநிலை பராமறிப்பு நிலையங்களிலும் அனுமதிக்கப்படுகின்ற தொற்று அறிகுறிகள் எவையும் இல்லையெனில் அல்லது சிறிதளவு அறிகுறிகள் தென்படுகின்ற தொற்றாளர்களை 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்புவோம். அதன் பின்னர் 4 நாட்கள் அவர்கள் வீடுகளில் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கமைய தொற்று உறுதிப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவடைந்தததன் பின்னர் அவர்கள் வழமையைப் போன்று தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அதன் பின்னர் அவர்களை தொற்றாளர்களாக கருத வேண்டியேற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04